ஓய்வோ, விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும்.! முன்னாள் தேர்வுக்குழு தலைவர் பேச்சு.!

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டார் ஸ்போர்ட்க்கு பேட்டி ஒன்று அளித்த அவர் பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக தோனியின் ஓய்வு பற்றியும் கூறினார். அதாவது, அது குறித்து பேசிய அவர், ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் தெரிவித்தார். பின்னர் தேர்வு குழு உறுப்பினர் வேலைக்கு அப்பாற்பட்டு சொல்ல வேண்டும் என்றால் நான் மற்றவர்களைவிட தோனியின் தீவிர ரசிகன் என்றும், அவர் ஒரு கேப்டனாக அனைத்து சாதனைகளையும் செய்துவிட்டார்.

அதில் இரண்டு உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, இந்தியாவை டெஸ்ட் பட்டியலில் முதல் இடத்துக்கு கொண்டு வந்தது, இதையெல்லாம் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய எம்.எஸ்.கே. பிரசாத், அவருடைய முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். தேர்வு குழுவராக நாங்கள் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதைத்தான் நாங்கள் இப்போது செய்து இருக்கிறோம் என குறிப்பிட்டார். தொடர்ந்து ரோஹித் சர்மா பற்றியும் பேசிய அவர், இப்போது டெஸ்ட், ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டி என அனைத்து போட்டியிலும் அசத்தும் வீராக உருவாகியுள்ளார். இது எங்களுக்கே ஆசிரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்