திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது…!!

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது…!!

திருவண்ணாமலையில் பரணி தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று கார்த்திக்கை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related image

திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் சிவத்தலம் இதுவாகும்.இங்கு எம்பிரான் ஜோதி ரூபமாக எழுந்தருளும் அற்புதக்காட்சி கார்த்திகை மாதம் மகாதீபம் என்றழைக்கப்படுகிறது.இங்கு அண்ணாமலையாராக சிவபெருமானும், உண்ணாமுலையம்மையாக பார்வதிதேவியும் காட்சி தருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு  பரணி தீபம் ஏற்றப்பட்டது.அதிகாலை 4 மணிக்கு கோவிலின் கருவறை முன்பு பூஜைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உணர்ச்சி பொங்க அரோஹரா கோஷத்துடன் வழிபாடு செய்தனர்.

Related image

DINASUVADU
author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *