சபரி மலைக்கு சென்று விட்டு வீடு செல்லும் வழியில் கார்விபத்து!சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பக்தர்கள்!

  • சபரி மலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
  • இந்த விபத்தில் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பக்தர்கள்.

சென்னையை சேர்ந்த 6 ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்தவர்கள் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியே வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவர்கள் வந்த கடையநல்லூர் மெயின் பஜாரில் எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதி நிற்காமல் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் ஒன்றை உரசியதுடன் எதிரே வந்த டிராக்டர் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டுனரும் சாலையில் நடந்துவந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில் காரில் இருந்த ஐயப்ப பகதர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.