#Breaking: சபரிமலையில் வரும் 14 ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதில்லை- தேவஸ்தானம் போர்டு!

மாதாந்திர பூஜைக்காக வரும் 14 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் என தெரிவித்த நிலையில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் போர்டு தெரிவித்தது.

கேரளா மாநிலம், சபரிமலையில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் இந்த பூஜையில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தான போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார்.

மேலும், ஜூன் 14 ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு, 19 ஆம் தேதி வரை நடைபெறும் மிதுனம் பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவலாம் என்பதால் சபரிமலையில் ஜூன் 19 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஆராட்டு விழா ரத்து என தெரிவித்தார்.