ரஜினியின் பஞ்ச் டயலாக்கை பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்

ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பர்,ஆனால் கைவிடமாட்டார் ; கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார் ஆனால் கைவிட்டுவிடுவார் என்று ரஜினியின் வசனத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பேசியுள்ளார். சென்னையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் மக்களவைத் தேர்தலில் திமுக பெற்றுள்ள வெற்றியை குறிப்பிட்டு இந்த வசனத்தை பேசியுள்ளார்.
மேலும், திமுக பெற்றுள்ள வெற்றியால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும் கூறியுள்ளார்.தமிழகத்தில் அதிமுக ஆட்சியானது தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.