சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறிய துணை முதல்வர்.!

நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் – துணை முதல்வர் பன்னீர் செல்வம்.

நாடு முழுவதும் நாளை 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து தலைவர்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஒ.பன்னிர் செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை தகர்த்தெறிந்து, நம் தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வேளையில், மாண்புமிகு அம்மா அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளை சிறப்பிக்க திருவுருவச் சிலைகள், மணி மண்டபங்கள் அமைத்தல், தியாகிகள் ஓய்வூதியத் தொகை உயர்த்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்பதை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன் என்றும் இப்பொன்னாளில், விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளை போற்றி வணங்கி, தாய்த்திருநாடும், நம் தமிழ்நாடும் வளம் பெற ஒற்றுமையாய் உழைத்திட உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்