டெல்லி வன்முறை ஒளிபரப்பு! இரண்டு சேனல்களுக்கு தடை விதித்த தகவல் ஒலிப்பரப்புத்துறை!

டெல்லியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பு செய்த இரண்டு சேனல்களுக்கு 48 மணிநேரம் ஒளிபரப்ப தடை விதித்து, தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏசியாநெட் நியூஸ் சேனல் ஒரு வழிபாட்டு தளத்தின் மீதான தாக்குதலை மிகைப்படுத்தி காட்டியதாகவும், ஒரு சமுதாயத்திற்கு சாதகமாக செயல்பட்டதாகவும் தகவல் ஒலிபரப்பு துறை கூறியுள்ளது. 

மேலும், மீடியா ஒன் தொலைக்காட்சியின் செய்திகள் சிஏஏ ஆதரவாளர்களின் கலவரத்தின் மீது மட்டுமே கவனத்தை செலுத்துவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, தகவல் ஒளிபரப்பு துறையின் இந்த செயல், சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதல் என சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.