டெல்லி வன்முறை : அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்- கே.எஸ்.அழகிரி

டெல்லியில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று  அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கடந்த 4 நாட்களாக வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டு கலவர களமாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் அப்பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் வன்முறையில் வீடுகள் மற்றும் பொது சொத்துக்கள் போன்றவை சேதமடைந்தன.இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,டெல்லியில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.