நடுரோட்டில் அடித்து கொல்லப்பட்ட சிறுவன்.! மதப்பிரச்னையாக மாறிவிடும் அபாயம்.?!

டெல்லியில் உள்ள மடிபூர் பகுதியில் சிறுவர்கள் கும்பல்  ஒரு சிறுவனை அடித்து கொன்றுள்ளனர். இதனை சாதி மத ரீதியில் சிலர் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள மடிபூர் பகுதியில் சிறுவர்கள் கும்பல்  ஒரு சிறுவனை அடித்து கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகின்றன. மேலும், இந்த வீடியோவிற்கு கீழ் சிலர் மதவாத பிரிவினைகளை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மடிப்பூர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, ஒருவர் டிவிட்டரில் பதிவிடுகையில் ஒரு இந்து சிறுவனை சில முஸ்லீம் சிறுவர்கள் அடித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்.  ஆனால், இந்த கூற்றை பலர் (முன்னணி பத்திரிகை உட்பட) மறுத்து வருகின்றனர். அந்த கொலை செய்த கும்பலில் இந்து சிறுவர்களும் இருந்தார்கள் என குறிப்பிட்டு வருகின்றனர். அதனால், இந்த கொடூர கொலை சம்பவம் சாதி, மதம் சார்ந்த பிரச்னை இல்லை. வேறு பிரச்சனை இல்லை.  என கூறிவருகின்றனர்.

ஆனால், அந்த சிறுவன் நடுரோட்டில் அடித்து கொல்லப்படும் வரையில் ரோட்டில் நடந்து சென்ற யாரும் இந்த சம்பவத்தை தடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.