டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு. ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்ததாக கடந்த ஆண்டு 20 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டது.
20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. அவசர கதியாக விசாரிக்கப்பட்டு குடியரசு தலைவருக்கு இந்திய தலைமை தேர்தல் ஒப்புதலுக்கு அனுப்பபட்டதாக நீதிபதிகள் கருத்து. இதனால் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தது செல்லாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.