ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு

சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி  சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது. இதனை தொடர்ந்து சிபிஐ வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில்  அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பம் திகார் சிறையில் உள்ளார்.எனவே அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக  ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான தீர்ப்பு  இன்று வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்.இன்றைய தீர்ப்பில் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 86 நாட்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார் சிதம்பரம்.