சிதம்பரத்தின் ஜாமீன் மனு !தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  கடந்த மாதம் 21-ஆம் தேதி  முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.மேலும் காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தது.சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில்,  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை அளித்து விடுவார் என்று சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்  இந்த வழக்கு தொடர்பான  விசாரணை இன்று நடைபெற்றது.அதில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட், சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.