டெல்லி இளம்பெண் மாயம்! கழுத்து நெறித்து கொல்லப்பட்டு சாக்கு மூட்டையில் கண்டெக்கப்பட்ட கொடூரம்!

டெல்லி இளம்பெண் மாயம்! கழுத்து நெறித்து கொல்லப்பட்டு சாக்கு மூட்டையில் கண்டெக்கப்பட்ட கொடூரம்!

பட்டப்படிப்பை முடித்த ஒரு இளம்பெண் காணாமல் போய், பின்னர் போலீசார் தேடுதல் வேட்டையில் சாக்குமூட்டையில் பிணமாக கிடைக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் தனது பட்டப்படிப்பை முடிந்த அந்த பெண் ஹரியானாவில் மேற்படிப்பு தொடங்க திட்டமிட்டிருந்துள்ளார். இந்நிலையில், தனது பழைய ஆசிரியரை பார்த்துவிட்டு வருவதாக, கூறி, வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் வெகுநேரமாகியும் அவரை காணவில்லை. இதனால் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.
பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு ஓ=பிறகு அங்குள்ள ஒரு கால்வாயில் சந்தேகப்படும்படியாக ஒரு மூட்டை தென்படுவதை பார்த்து அதனை ஆராய்ந்த போது அது காணாமல் போன இளம்பெண்ணின் உடல் என கண்டறியப்பட்டது.
பின்னர் அந்த உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொள்ளப்பட்டது தெரியவந்தது. அந்த பெண் தனது ஆசிரியரை பார்க்க செல்வதாக கூறியதால் அந்த ஆசிரியரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தேகப்படும்படியாக இருக்கும் நபர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube