டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 503 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 523 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து கொரோனா பலி எண்ணிக்கை 7 ஆக உள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்