தன்னிடம் செயின் பறித்தவனை விரட்டி பிடித்து அடித்த வீர மங்கைகள்!

தற்போது இந்தியாவில் பெரு நகரங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. அவற்றில் பல சம்பவங்களை சிசிடிவி கேமிரா உதவியுடன் போலீசார் கண்டுபிடித்து விடுகின்றனர்.

டெல்லியில் உள்ள நங்கோய் எனுமிடத்தில் இரு பெண்கள் தன்னிடம் செயின் பறித்தவனை விரட்டி பிடித்து பொதுமக்களிடம் அடிவாங்க வைத்து தனது செயினை வாங்கியுள்ளார்.

அந்த பெண் டெல்லி, நங்கோய் எனுமிடத்தில், இரு பெண்கள் ரிக்ஷயாவை விட்டு இறங்குகையில், இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர், ஒரு பெண்ணின் செயினை பறித்து விட்டு செல்கையில் அந்த பெண் செயினை திருடியவனை பிடித்து கிழே தள்ளினார்.

இதை செயினை பறித்தவன் மாட்டிக்கொள்ள, பைக்கில் வந்தவன் பைக்கை ஒட்டி தப்பி சென்றுவிட்டான். செயினை பறித்தவனை பொதுமக்கள் அடித்து பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். செயினை மீட்டு போலீசார் அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

தனது செயினை பறித்தவனை எந்த பயமும் இன்றி விரட்டி பிடித்து தாக்கிய அந்த பெண்ணின் வீரத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.