நேத்து மிஸ் ஆச்சு ..! இன்னைக்கு ஆகல ..!வேட்புமனுவை தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்

நேத்து மிஸ் ஆச்சு ..! இன்னைக்கு ஆகல ..!வேட்புமனுவை தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்

  • டெல்லியில் பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
  • பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். 

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது.பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .கடந்த 14-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஜனவரி 22 -ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலினை மற்றும் ஜனவரி 24 -ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் .

இதற்கு இடையில் நேற்று  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய பேரணியால் அவரால் உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு செல்ல முடியவில்லை.இதனால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை.இதனையடுத்து இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று அரவிந்த்  கெஜ்ரிவால் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

Join our channel google news Youtube