மக்களவை தேர்தலில் தோல்வி எதிரொலி ! டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று  டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கே, கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மக்களவை தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment