இங்கிலாந்தை வதம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா..? இந்திய அணி ..!

தற்போது பெண்களுக்கான உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது .இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் தற்போது அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா மற்றும்  ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இரண்டு அரையிறுதிப் போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இங்கிலாந்து அணியும் மோதுகிறது.

இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியும் , ஆஸ்திரேலிய அணியும் மோதுகிறது. இதில் முதல் போட்டி காலை 08.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி  பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இன்று நடக்கும் பல பரிட்சையில் வெற்றி பெற்ற அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்லும். அதனால் இன்றைய போட்டி அனைவரும்  மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.  இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை வதம் செய்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.இரண்டாவது போட்டி பிற்பகல் 01.30 மணிக்கு தொடங்க உள்ளது.

author avatar
murugan