அவதூறு வழக்கு ..! விஜயகாந்தை எச்சரித்த நீதிமன்றம்

அவதூறு வழக்கு ..! விஜயகாந்தை எச்சரித்த நீதிமன்றம்

  • அவதூறு வழக்கில் விஜயகாந்த் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். 
  • விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2012-ஆம் ஆண்டு தேனியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்று பேசினார் .ஆனால், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.எனவே தமிழக அரசு சார்பாக தேனி நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதனால் இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.எனவே  இதை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் வந்தது.இந்த விசாரணையில்,  விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

ஆனால் நீதிமன்றம், மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதம் விதிக்கலாம் எச்சரிக்கை விடுத்தது.எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே  என்று தெரிவித்தனர் .மேலும் எதிர்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்று  துணை குடியரசு தலைவர்  கூறியுள்ளதையும் மேற்கோள்கட்டியது நீதிமன்றம். இறுதியாக நீதிமன்றம்  வழக்கை வாபஸ் பெற அனுமதித்து,  தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

 

Join our channel google news Youtube