40 முதல் 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும்- வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாள் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். மேலும் வருகின்ற 16ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலானது, ஆந்திராவில் கரையை கடக்கும் எனவும், கரையை கடக்கும் நேரம், நாளை தான் தெரியும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள கரையோர மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.