அண்ணா பல்கலைக்கழத்தை இரண்டாக பிரிக்க முடிவு -அமைச்சர்கள் ஆலோசனை

அண்ணா பல்கலைக்கழத்தை இரண்டாக பிரிக்க முடிவு -அமைச்சர்கள் ஆலோசனை

  • சென்னை அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 
  • தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தி வருகிறது. இந்த அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு ஆலோசனையில் இருந்தது.

தற்போது அதற்கான முயற்சியில் தற்போது சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்காக ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube