தமிழகத்தில் 2ஆம் நாளாக ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் ஒரே நாளில் 13 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 806 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா தோற்றால் இன்று 2ஆம் நாளாக ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, மக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியது.