தலைநகரில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளது!

டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,35,598 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,206 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,20,930 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,963 ஆக அதிகரித்துள்ளது.  அங்கு 10,705 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.