சூப்பர் ஸ்டாரிடம் நான் இந்த மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் கதை கூறியுள்ளேன்! – ஏ.ஆர்.முருகதாஸ் ஓபன் டாக்!

சூப்பர் ஸ்டாரிடம் நான் இந்த மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் கதை கூறியுள்ளேன்! – ஏ.ஆர்.முருகதாஸ் ஓபன் டாக்!

  • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 
  • சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி ஒரு கதை கூறியுள்ளேன். என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்பட ப்ரோமோஷனுக்காக அளித்த ஒரு பேட்டியளித்தார்.

அவர் அளித்த பேட்டியில், ‘ நான் ரஜினிகாந்திடம் சந்திரமுகி படத்தில் வரும் வேட்டையன் கதாபாத்திரத்தை வைத்து ஒரு கதை செய்ததாகவும், அந்த கதையை ரஜினியிடம் கூறினேன் ஆனால் அது நடக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. மேலும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் தாடி வைத்திருப்பதற்கு பின்னர் ஒரு கதை இருக்கிறது’ எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube