எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் இதுதான்! அனிருத் நெகிழ்ச்சி!

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். 
  • அப்படத்தில் கண்ணுல திமிரு எனும் பாடலை 4 திருநங்கைகள் பாடியுள்ளனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர உள்ளது.

இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பாடல்கள் வெளியானது. ஆனால், கண்ணுல திமிரு எனும் பாடல் வெளியாக வில்லை. இந்த பாடலில் அண்ணாமலை படத்தின் இசை கோர்க்கப்பட்டுள்ளதாம். இந்த பாடல் இசை கோர்ப்பு பணிகளை இசையமைப்பாளர் தேவாவும் செய்துள்ளார். அண்ணாமலை படத்தின் இசை பயன்படுத்தப்பட்டுள்ளதால் டிவோ, லஹாரி நிறுவனங்களிடம் அனுமதி பெற்றுத்தான் வெளியிட உள்ளதாம்.

இந்த பாடலை 4 திருநங்கைகள் சேர்ந்து பாடியுள்ளனராம். இந்நிலையில் இசையமைப்பாளர் தேவாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து இது என் வாழ்வில் மறக்கமுடியாத தருணம் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் தர்பார் இசையமைப்பாளர் அனிருத்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.