இன்றைய தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் நடிகர் சந்தானம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்த நேரத்தில் அவருக்கும் கதாநாயகன் ஆசை வந்தது. அதனால் காமெடியனாக நடிப்பதில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார். இதனால் காலியாக இருந்த அந்த காமெடியன் இடத்தை நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி சில காலம் நிரப்பினார்.இருந்த போதும் அவராலும் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் இப்போது பிஸியான காமெடியனாக யோகி பாபு நடித்துக் கொண்டிருக்கிறார்.
வாரத்துக்கு ஒரு யோகி பாபு நடித்தப் படம் ஒன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களான ரஜினி, விஜய், அஜித் என அனைவரின் படங்களிலும் வரிசையாக நடித்துவரும் யோகிபாபு தனக்கு முன்னால் தான் இருந்த இடத்தில் இருந்த நகைச்சுவை நடிகர் சந்தானத்தோடு கைக்கோர்த்துள்ளார். இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக இருக்கிறது.
இரண்டு முன்னணி கதாநாயகர்கள் நடித்திருப்பதால் இந்தப் படம் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.எனவே இரு காமெடி நடிகர்கள் கலக்கி இருப்பதால் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
DINASUVADU.