அதற்குள் முடிந்துவிட்டதா சந்தானத்தின் டகால்டி!?

அதற்குள் முடிந்துவிட்டதா சந்தானத்தின் டகால்டி!?

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்து நின்றவர் நடிகர் சந்தானம். பின்னர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம் ஹீரோவானார். பின்னர் தில்லுக்கு துட்டு 1 & 2 மற்றும் ஏ-1 என ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து இவரது நடிப்பில் சர்வர் சுந்தரம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை அடுத்து டகால்டி எனும் படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் முதல் பார்வை ஓரிரு மாதத்திற்கு முன்பாக வெளியானது. ஆனால் அதற்க்குள் தற்போது அதன் ஷூட்டிங் நிறைவு பெற்றுவிட்டது.

இந்த படத்தை விஜய் ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார். ரித்திகா சின் என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை அடுத்து சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்து வருகிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube