தெலுங்கானாவில் மே 29 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அம்மாநில முதல்வர் அறிவிப்பு.!

தெலுங்கானாவில் மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநில அரசுகள் மேலும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டத்தில் உள்ளன. இந்த நிலையில், தெலுங்கானாவில் மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் மாலை 6 மணிக்கு முன்னதாகவே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு சென்று விட வேண்டும்.

மேலும் ஊரடங்கை மீறி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே தெலுங்கானாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1096 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் 49,391 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,694 பேர் பலியாகியுள்ளனர். பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49,391 பேரில் 14,183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்