கஜா புயலுக்கு பின் 4 மாவட்டங்களில் 1.52 லட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீடு…! அமைச்சர் செல்லூர் ராஜு

கஜா புயலுக்கு பின் 4 மாவட்டங்களில் 1.52 லட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆய்வுகூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், கஜா புயலுக்கு பின் 4 மாவட்டங்களில் 1.52 லட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர்.பயிர்க்காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி  கடிதம் எழுதியுள்ளார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Leave a Comment