நக்சலைட்டுகள்  சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி!

சி.ஆர்.பி.எப் வீரர்கள் 9 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில்  உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் ((kistaram)) வனப்பகுதியில், மாவோயிஸ்ட்டு தேடுதல் வேட்டையில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில், 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து நக்சலைட்டுகளுடன், துப்பாக்கி சண்டை நீடித்து வரும் நிலையில், அப்பகுதிக்கு கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 5 வீரர்களில், நான்கு பேரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment