மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர்..!

  • மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ.
  • சந்திப்பின்போது தனது கையொப்பமிட்ட டீ-சர்ட் ஒன்றையும் அளித்தார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை கிரிக்கெட் வீரர் பிராவோ சந்தித்து பேசியுள்ளார். மேற்கிந்திய தீவு  அணி வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான பிராவோ தமிழகம் வரும்போதெல்லாம் இங்குள்ள பிரபலங்களை சந்திந்து பேசுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையிலேயே இந்த முறை கமல்ஹாசனை சந்தித்தார். இதனிடையே சந்திப்பின்போது தனது கையொப்பமிட்ட டீ-சர்ட் ஒன்றையும் கமல்ஹாசனுக்கு பிராவோ பரிசளித்தார். மேலும் வருகின்ற வருடம் 2020 சீசன்-13-வது ஐபிஎல் தொடங்கருப்பதால் அதற்கு  இந்த மாதம் வீரர்களுக்கு ஏலம் நடைபெறவுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்