#Breaking : நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • நிர்பயா வழக்கு குற்றவாளிகள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்தனர். 
  • குற்றவாளிகளில் 2 பேரான அக்‌ஷய் குமார் சிங், பவன் குமார் சிங் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்தது.

எனவே குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனு  தாக்கல் செய்தனர்.அவர்களது  சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை  முகேஷ் சிங் அனுப்பினார்.ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்தார்.மேலும் கருணை மனுவை  உள்துறை அமைச்சகமும் நிராகரித்தது.குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.இதற்கு இடையில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனவே குற்றவாளிகள் பவன் மற்றும் அக்சய் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனுக்களை  தாக்கல் செய்தார்.அந்த மனுக்களில்,கருணை மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் திகார் சிறை நிர்வாகம் வழங்க மறுப்பதாக புகார் தெரிவித்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது அரசு தரப்பில் அளித்த விளக்கத்தில்,நிர்பயா குற்றவாளிகள் கோரிய ஆவணங்கள் திகார் சிறை அதிகாரிகளிடன் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது .தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை தாமதிக்க குற்றவாளிகள் தந்திரம் செய்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.இதன் பின்னர்  விளக்கத்தை ஏற்று 2 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.