சென்னையில் குறையாத கொரோனா தாக்கம்…. திரு.வி.க நகரில் இன்று மட்டும் 59 பேருக்கு பாதிப்பு…

சென்னையில் குறையாத கொரோனா தாக்கம்…. திரு.வி.க நகரில் இன்று மட்டும் 59 பேருக்கு பாதிப்பு…

 தலைநகர் சென்னையின்  திரு.வி.க. நகர் மண்டலத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் அடுத்தடுத்து தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, 4-ஆம் கட்டமாக மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொரோனா தொற்றின் வீரியம் குறைந்த பாடில்லை. தற்போது தலைநகர் சென்னையின்  திரு.வி.க. நகர் மண்டலத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவகள் தெரிவிக்கின்றன. அதில், 2 பேர்  கர்ப்பிணிகள் , 2 பேர் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் , மேலும் தமிழ்நாடு ஆயுதப்படை காவலர்கள்  உள்பட 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Join our channel google news Youtube