கொரோனா ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா…

கொரோனா வைரஸ் தொற்றைன் பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநிலத்தில் வருகின்ற மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா  பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் அடுத்தடுத்து தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, 4-ஆம் கட்டமாக மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில்  மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்திலும் மே 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும், வரும் மே 27 ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தளர்த்தப்பட்ட இடங்களில் வியாபாரிகள் கடைகளைத் திறந்துகொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

author avatar
Kaliraj