கொரோனா கண்டறியும் கருவியில் வெப்பநிலையை குறைத்து காட்ட மாத்திரை பயன்படுத்தியவர் கைது!

கொரோனா கண்டறியும் கருவியில் வெப்பநிலையை குறைத்து காட்ட மாத்திரை பயன்படுத்தியவர் கைது!

கொரோனா வைரஸ்க்கு  பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த நோயிலிருந்து குணமாகி செல்கின்றனர். எனவே இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகிறது. 

 வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை உடல் வெப்பநிலை மற்றும் நோய்களை கண்டறிந்து தான் நாட்டிற்குள் அனுமதித்து வருகின்றனர். இவ்வாறு உடல் வெப்பநிலை கணிக்கும் கருவியில் தங்களது உடல் வெப்பநிலை குறைவாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக பரசிட்டமோல் மாத்திரையை சிலர் உட்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் அவ்வாறு இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த ஒருவர் தற்போது மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட போது தன்னுடன் வந்த 10 பேர் இதுபோன்று செய்ததாகவும்,  மாத்திரை உட்கொண்டதால் தான்  உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

author avatar
Rebekal
Join our channel google news Youtube