அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்! 3 ஆயிரமாக ஊயர்ந்த பலி எண்ணிக்கை!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது.  நோயால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள சமார் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இதனால் தற்போது வரையில் 7,82,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், உலக அளவில் அமெரிக்காவிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,000ஐ எட்டியுள்ளது. 

நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3003 ஆக உயர்ந்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.