கொரோனா அச்சம்.. நின்று போன இலங்கை-நியூஸிலாந்து தொடர்!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி, வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இதனைதொடர்ந்து, இரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பரவியுள்ளதால், இந்த தொடரை ரத்து செய்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதன்காரணமாக, தொடரில் விளையாடாமல் இங்கிலாந்து அணி பாதியிலே புறப்படவுள்ளது.