600 பேரை தேடுகிறோம்…தேடுதல் வேட்டையில் சுகாதாரத்துறை..வெடிக்கும் மாநாடு..சர்ச்சை

டெல்லி மத மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 600 பேர் எங்கே எனத் தேடி வருகிறோம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர் திரும்பியுள்ளனர்.அவ்வாறு டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்களில் தமிழகத்தில் 259 பேரை கண்டுபிடித்து  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவித்த சுகாதாரத்துறை அடையாளம் காணப்பட்டவர்களில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்தவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்.மேலும் 600 பேரைத் தேடி வருதாகவும் தேடப்படுபவர்கள் தாங்களகவே முன்வந்து தகவல் அளிக்க சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

author avatar
kavitha