கர்நாடகாவில் ஒரே நாளில் 1,839 பேருக்கு கொரோனா..மொத்த பாதிப்பு 21,000-ஐ தாண்டியது.!

கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 1,839 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதித்தவரின் எண்ணிக்கை 21,549 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,549 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 335 அதிகரித்துள்ளது. மேலும் 439 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 9244 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.