இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 25 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 25 ஆக உயர்வு.!

உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,883 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,64,103 ஐ எட்டியுள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,42,361 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 909 ஆக இருந்தது. 

தற்போதைய நிலவரபடி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளது என்றும் இதில் 931 பேர் இந்தியர்களும், 48 பேர் வெளிநாட்டினர் என மொத்தம் 979 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 25 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். மேலும் 87 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube