சென்னையை அதிர வைக்கும் கொரோனா பாதிப்பு! சற்றுமுன் வெளியான பாதிப்பு விபரம்!

சென்னையை அதிர வைக்கும் கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில், சென்னையில் தான் இதுவரை கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், சென்னையில் 15 மண்டலங்களில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 5,981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கோடம்பாக்கத்தில் 4,149 பேரும், தண்டையார் பேட்டையில் 4,896 பேரும், தேனாம்பேட்டையில் 4,652 பேரும், அண்ணாநகரில் 3,972 பேரும், திரு.வி.க.நகரில் 3,356 பேரும், வளசரவாக்கத்தில் 1,638 பேரும், திருவொற்றியூரில் 1,434 பேரும், அடையாற்றில் 2,204 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.