கொரோனாவின் கோரத்தாண்டவம்.! உலகளவில் 1.5 கோடியை நெருங்க உள்ளது.!

விடாத கொரோனா உலகளவில் 1.5 கோடியை நெருங்க உள்ளது. இந்நிலையில்  உயிரிழப்பு எண்ணிக்கை அரை கோடியை தாண்டியது.

தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,413,558 ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,669,594 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 508,250 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை குறிவைக்கும் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. அந்த வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 5.66 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்திற்குள் 5,48,318லிருந்து 5,66,840ஆக உயர்ந்துள்ளதாகவும்,மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723லிருந்து 3,34,822ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,475லிருந்து 16,893ஆக உயர்ந்துள்ளதாகவும்  மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.