இந்தியாவில் கொரோனா பலி 149…பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது.!

இந்தியாவில் கொரோனா பலி 149…பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வல்லரசு நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,31,973 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 82,085 ஆகவும், வைரஸில் இருந்து 3,02,209 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நினது முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 402 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube