தேதியை குறிப்பிடாமல் தேர்வை ஒத்திவைத்த கேரளா.! குறைந்ததை அதிகரிக்க விரும்பவில்லை.!

தேதியை குறிப்பிடாமல் தேர்வை ஒத்திவைத்த கேரளா.! குறைந்ததை அதிகரிக்க விரும்பவில்லை.!

வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து தேர்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நான்கு கட்டங்களாக மே 31 வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவங்களும் மூடப்பட்டு, நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டது. இந்த நிலையில், சிபிஎஸ்இ மற்றும் நீட் போன்ற தேர்வுகளின் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சில தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், கேரளாவில் தற்போது குறைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்க விரும்பவில்லை என்று அம்மாநில அரசு, தேதிகள் ஏதும் குறிப்பிடாமல் அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளது. நாட்டிலேயே கேரளா தான் குறைவான பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் கொண்டுள்ளது. இதனிடையே, மே 26 ஆம் தேதி பள்ளி தேர்வுகளும், ஜூலை மாதத்தில் பல்கலைக்கழக தேர்வுகளும் நடைபெற இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது. தேர்வு எழுந்தும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து தேர்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube