இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1637 லிருந்து 1834 ஆக உயர்வு .!

கொரோனா வைரஸ்  உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால்  அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 935,957 ஆக அதிகரித்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,245 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 194,286 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் தற்போது நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 லிருந்து 1834 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 லிருந்து 41 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து 144 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவி இருக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா 302, கேரளா 241, தமிழ்நாடு 234, டெல்லி 152 ,உத்தரபிரதேசம் 103, கர்நாடகா 101 என அதிகப்படியாக இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,834 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 144 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
murugan