இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1965 ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1834 லிருந்து 1965 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 41 லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து 150 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவி இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா 335, கேரளா 265, தமிழ்நாடு 234, டெல்லி 152, உத்தரபிரதேசம் 113, கர்நாடகா 110 என அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலகை மிரட்டி வரும் கொரோனா வைரசால் அனைத்து நாடுகளும் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 935,957 ஆக அதிகரித்து, பலியின் எண்ணிக்கை 47,245 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 194,286 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்