கேரளாவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 86 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,412 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வந்த 46 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பேர், அவர்களுடன் தொடர்பில்இருந்த 14 உட்பட 86 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது 774 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து இன்று 37 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை 627 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,412 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்