கவனத்திற்கு!!மூடப்படுகிறது -கோயம்பேடு மார்கெட்..வெளியாகியது அறிவிப்பு

 பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு உத்தரவு கோரிக்கை ஏற்று கோயமேடு  காய்கறி மற்றும் பழமார்கெட் நாளை மறுநாள்(ஞாயிறு) அன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வியாபாரிகள் சங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் நாளை மறுநாள் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுகிறது. வரும் 22 ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என்றும் சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதால் நாளை மறுநாள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை என்று  அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha