கொரோனா நிவாரணம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் 70 கோடி நிதியுதவி – செங்கோட்டையன்

கொரோனா நிவாரணம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் 70 கோடி நிதியுதவி – செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியினை வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து பலர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரணம் நிதியாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியமான ரூ.70 கோடி கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube