தப்பியோடிய கொரோனா நோயாளி.. கூவம் ஆற்றில் சடலமாக மீட்பு!

தப்பியோடிய கொரோனா நோயாளி.. கூவம் ஆற்றில் சடலமாக மீட்பு!

சென்னையில் தப்பியோடிய 65 வயது கொரோனா நோயாளி, சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்பட்டது.

சென்னையில் 65 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரால் பலருக்கு கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால், அவரை தனிப்படை அமைத்து காவலர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில், தப்பியோடிய அந்த 65 வயது கொரோனா நோயாளி, சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட அந்த நபரின் உடல், சென்னைக்கு தப்பியோடிய கொரோனா நோயாளி என தெரியவந்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடும் சம்பவம், சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.

Join our channel google news Youtube